districts

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ரங்கசாமி பாராட்டு

 புதுச்சேரி,ஆக.23-

     இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

      நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3இன் லேண்டரை மனிதர்களால் ஆராயப்படாத நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. மனிதர்களால் ஆராயப்படாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் இது என்கிற பெருமையை இஸ்ரோ ஏற்படுத்தியுள்ளது.

     இது இந்தியாவின் விண்வெளிப்பயண லட்சியம், தொழில்நுட்ப வல்லமை மற்றும் துணிச்சலை உலகிற்கு நிரூபிப்பதாக அமைந்துள்ளது. இந்தியர்கள் அனைவரும் பெருமைகொள்ளும் வகையிலான இந்தச் சாதனையை  நிகழ்த்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது உளம்  நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.