சென்னை, செப்.29– உலக இதய தினத்தை கொண்டாடும் வகையில் அதன் ஒரு பகுதியாக சென்னை கொட்டிவாக் கத்தில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையான புரோமெட் மருத்துவமனை இதய ரத்த நாள பாதிப்புக்கு நாட்டிலேயே முதன் முறையாக ‘உத்தரவாதத்து டன் கூடிய ஆஞ்சியோபிளா ஸ்டி’ சிகிச்சை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் டி எஸ் ஜவஹர், ஐஏஎஸ், கூடுதல் தலை மைச் செயலாளர், ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தமிழக அரசின் செய்திதுறை முன்னாள் இயக்குநரும் தற்போதைய கூடூர் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் வெலகபள்ளி வரபிர சாத ராவ், காவல்துறை முன்னாள் கூடுதல் இயக்கு நர் சேகர், புரோமெட் மருத்து வமனையின் நிர்வாக இயக் குநர் ஸ்பூர்த்தி அருண் மற்றும் மருத்துவமனையின் தலைமை இதய நோய் நிபுணருமான டாக்டர் அருண் கல்யாண சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்ட னர். “உத்தரவாதத்துடன் கூடிய ஆஞ்சியோபிளா ஸ்டி” திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு முதல் 12 மாதங்களில் ஸ்டென்ட் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்று டாக்டர் அருண் கூறினார். இது குறித்து இம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் பேசுகையில், உலக அள வில் நிகழும் இறப்புகளில் இதய நோயும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில், 24.8 சதவீத இறப்புகளுக்கு இதயநோய் காரணமாக உள்ளது. இருப்பினும், நம் வாழ்க்கை முறையை மாற்று வதன் மூலம் இதில் பாதியை நம்மால் தடுக்க முடியும் என்றார்.