districts

அமெரிக்க வாழ் இந்திய முதியவருக்கு சிக்கலான மகாதமனி, இதய அறுவை சிகிச்சை

சென்னை, ஆக.10-

    சென்னை - வடபழனி, சிம்ஸ் மருத்துவ மனையில் உள்ள இதய மற்றும்  பெருந்தமனி  வால்வு குறுக்க நிலைய மருத்துவர்கள் குழு, 66 வயது அமெரிக்க வாழ் - இந்திய முதியவருக்கு இதயம் சார்ந்த அரிய காரணத்தால் ஏற்பட்ட குரல் கரகரப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றுக்கு சிக்கலான அறுவை சிகிச்சைகள் மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தது.  

   ஐ.சி.ஏ.டி.  இயக்குநர் மற்றும் மூத்த மருத்துவ ஆலோசகருமான டாக்டர் வி.வி. பாஷியின் தலைமையிலான மருத்துவர் குழு, துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில்  கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராஃப்டிங் சிகிச்சையை மேற்கொண்டது.  

    அதைத் தொடர்ந்து மகாதமனியில் ஸ்டென்டிங் செய்யப்பட்டதன் மூலம் நோயாளியின் ஆயுள் கூட்டப்பட்டது மட்டு மல்லாமல், அவரது வாழ்க்கைத்  தரமும் உயர்த்தப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த 66 வயதான ஒரு அமெரிக்க குடிமகன்,  மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் குரல்  கரகரப்புத் தன்மைக்காக பரிசோதிக்கப் பட்டார். அவருக்கு மார்பு சி.டி. ஸ்கேன் எடுத்த போது அதில் மகாதமனி 7 செ.மீ. வீக்கத்தைக் காட்டியது. மேலும் இதய தசைக்கு  ரத்தம் வழக்கும் அனைத்து தமனிகளிலும் கடுமையான அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    மிகுந்த கவனத்துடன் இதய-நுரையீரல் கருவி, பலூன் பம்ப் ஆகியவற்றைப் பயன் படுத்தாமல், துடிக்கும் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை முறையின் மூலம், அவரது  ரத்த அழுத்தம் கட்டுக்குள் உறுதி செய்யப் பட்டது.

    அறுவை சிகிச்சை, முறையான மருந்துகளுடன் ஆறு வாரங்களுக்குப் பின் அவர் குணமடைந்தார்.