districts

img

மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது

திருவொற்றியூர் 4ஆவது வார்டு ராமநாதபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 பேருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராமநாதபுரம் கிளை சார்பில் ஞாயிறன்று (டிச. 10) உணவு வழங்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் குமார், தவமணி, விமலா, விஜயா, அமுல், பிரேம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 280 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி கிளைச் செயலாளர் பாரதி ராணி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர் தா.மோ அன்பரசன்,  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, திமுக மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை மனோகர்  ஆகியோர் பங்கேற்றனர்.