விழுப்புரம், ஜன. 6- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டத்திற்குட்பட்ட முண்டியம் பாக்கம் கிராமத்தில் தேசிய நெடுஞ் சாலையில் மேம்பாலம் அமைக்க வலி யுறுத்தி ஆட்சியர் மோகனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன் மனு அளித்தார். அந்த மனுவின் விவவரம் வருமாறு:- திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி முண்டி யம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் பேருந்து நிறுத்தம், ரயில்வே கேட் உள்ளது. ஆனால் இவை அனைத்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மறுபுறம் உள்ளதால் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து நடைபெற்கிறது. இதில் சிலர் இறந்தும் உள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே மேம்பாலம் அமைக்க முடிவு செய்து, சம்பந்தப்பட்ட துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டனர், ஆனால் இதுநாள் வரை பணிகளை தொடங்கப்படவில்லை. இந்த அந்த மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு முண்டியம் பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஓரத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் சாலைக்கு செல்ல முடியாத வகையில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே தடுப்பு அமைக்கப்படும். இதனால் முண்டியம்பாக்கத்தில் இருந்து ஒரத்தூர் செல்லும் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படும் எனத் தெரிகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்திலும் ஒரு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை வேண்டும். மேலும் மருத்துவமனை எதிரே அமைக்கும் மேம்பாலத்தை இருபுறமும் சுவர் எழுப்பி மண்கொட்டி அதன் மேல் மேம்பாலம் அமைக்காமல் காங்கிரீட் தூண்கள் எழுப்பி அதன் மேல் மேம்பாலம் அமைத்து இரண்டு கிராமங்களுக்கும் இடையே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி ஒன்றியச் செயலாளர் வி.கிருஷ்ணராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.டி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, கிளைச் செயலாளர் ஜெயசந்திரன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.