districts

img

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையை சூழ்ந்த வெள்ளம் - வேதனையின் உச்சத்தில் மக்கள்

திருவள்ளூர், டிச 7- ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறு ஆகியவற்றின் கரைகள்  உடைப்பால் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக் கோட்டை ஆகிய பகுதிகளில் ஆயி ரக்கணக்கான  வீடுகளை சூழ்ந்த மழைநீர்,  நள்ளிரவில் ஆற்று வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் வீடுகளில் இருந்த மின்சாதனங்கள்  அனைத்தும் சேதமடைந்ததால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளை யம் சோமஞ்சேரி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். ஆந்திராவில் பெய்த பலத்த மழை காரணமாக இரு தினங்களுக்கு முன் பிச்சாட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 16000 கன அடி உபரிநீர் ஆரணியாற்றில் வெளி யேற்றப்பட்டது. இதனால் ஆரணி யாற்றில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் இருகரை களை தொட்டபடி கரை புரண்டு ஓடியது. பிச்சாட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும்  ஆரணி யாற்றில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டது. ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளம் ஆரணி , புதுவாயல்,  பொன்னேரி வழியே சென்று பழவேற்காடு கடலில் ஆரணியாறு கலக்கிறது. நீர்போகும் வழிகளில் ஆரணி சுப்பிரமணிய நகர், மங்கலம்,  பெருவாயல், புதுவாயல், குன்னமஞ்சேரி,  ரெட்டி பாளையம், சோமஞ்சேரி, தத்தமஞ்சி, ஆண்டார்மடம், பழவேற்காடு ஆகிய பல்வேறு இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டு  அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் ஆற்று வெள்ளம் புகுந்தது. நள்ளிரவில் ஆற்று வெள்ளம் அதி கரித்ததால் வீடுகளில் இருந்த பொது மக்கள் அலறியடித்தபடி வெளியேறி உள்ளனர்.

அரிசி, பருப்பு, மாண வர்களின் நோட்டு, புத்தகங்கள், கட்டில், பீரோ, தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூட பத்திரப்படுத்தி எடுக்க முடியாமல் அனைத்தும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பொது மக்கள் கண்ணீர் விட்டு கதறினர். பல குடிசைகள், மண் வீடுகள் முற்றிலும் ஆற்று வெள்ளத்தில் சேத மடைந்துள்ளன. தனியாக ஆதர வின்றி வசித்து வரும் மூதாட்டி ஒரு வரது வீட்டின் மண் சுவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக தங்களை யாருமே வந்து கண்டு கொள்ளவில்லை என வேதனை யுடன் தெரிவிக்கின்றனர். மாற்று உடை கூட இல்லாமல் கட்டிய துணியுடன் நிற்கதியாய் தண்ணீரில் நிற்கிறோம். இப்படி பலர் கண்ணீர் சிந்தினர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் உணவு சமைத்து கொடுப்பதாகவும், அதிகாரிகள் யாரும் வரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். நள்ளிரவில் ஆற்று வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் ஊருக்குள் மார்பளவு வரை தண்ணீர் சென்றுள்ளது. சுமார் 10மணி நேரத்திற்கு மேலாக கட்டில் மீதேறி அச்சத்துடன் இருந்ததாக அம்மக்கள் கவலை தெரி வித்தனர்.  மேலும் வீடுகளின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஊருக்குள் ஆற்று வெள்ளம் சூழ்ந்த நிலையில் மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப் பட்டு, தகவல் தொடர்பும் ஏதும் இல்லா மல் தவித்து வருகின்றனர்.  ஊருக்குள் குடிநீர் கிடைக்காமல் அவதி படுகின்றனர்.

கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் பாதிப்பு

கொசஸ்தலை ஆற்றிலும் கட்டுக் கடங்காத அளவு வெள்ளம் கரை புரண்டோடியதால் ஊத்துக்கோட்டை,  சுப்பாரெட்டி பாளையம், கொண்ட கரை, நாப்பாளையம், குருவிமேடு, மணலிப்புதுநகர் , அத்திப்பட்டு புதுநகர், பழவேற்காடு மீனவ குப்பங்கள், ஆண்டார்மடம் உள்ளிட்ட கிராமத்திற்கு உள்ளே வெள்ளம் நீர் புகுந்துள்ளது. வீடுகளில் இடுப்பளவு தண்ணீர் நிரம்பியதால் கடுமையாக பாதித்துள்ளனர். மீனவர்களின் படகுகளும் சேதமடைந்துள்ளது. திருநின்றவூர் நகராட்சி பாதிப்பு திருநின்றவூர் நகராட்சியில் உள்ள 14, 15, 16, 17 ஆகிய வார்டுகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ள நீரை அகற்ற பெரிய ஏரியின் நான்கு மதகுகளை திறக்க வேண்டும். மிகப்பெரிய மோட்டார் களை கொண்டு வந்து வெள்ள நீரை அகற்ற நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

ஆண்டுதோறும் மழைக்காலங்க ளில்  சோமஞ்சேரி, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதன் பிறகு மீண்டும் மணல் மூட்டைகளை மட்டுமே அதிகாரிகள் அடுக்கி வைத்து விட்டு செல்வதாகவும், மீண்டும் அதே பகுதியில் அடுத்த ஆண்டு உடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் கிராமத்தை ஆற்று வெள்ளம் பாதிக்காத வகையில் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதியில் முறையாக கான்க்ரீட் தடுப்பு சுவர்கள் அமைத்து கரையை ஏற்படுத்தி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைய சேவை முடக்கப்பட்டதால் தகவல் தொடர்புகள் இல்லாமல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடி யாமைக்கு காரணமாக அமைந்தது. வெளி மாநில தொழிலாளர்களை அழைத்து வந்து கிராமங்களில் உடைந்துள்ள மின் கம்பங்களை அகற்றி விரைவில் மின் இணைப்பு களை வழங்கி, இருளை போக்க வேண்டும்,  டிராக்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்,  கிராம நிர்வாக அலு வலர்களை அந்தந்த ஊர்களில் இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்னும் உணவு, மாற்று உடை, குழந்தைகளுக்கு பால் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. ரூ5  பிஸ்கெட் பாக்கெட்டை ரூ20 கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று தேவையான உதவி களை செய்ய வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் ரெட் அலர்ட் மாவட்டம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன் ஏற்பாடுகள் நடந்த தாக  தெரியவில்லை.  பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளித்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களை பாது காக்க,  மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் வலியுறுத்தியுள்ளார். 

ரெட்டிபாளையம், சோமஞ்சேரி, பெருவாயல், பழவேற்காடு ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்ட குழு உறுப்பினர் இ.ராஜேந்திரன், பொன்னேரி பகுதி குழு உறுப்பினர் எம்.நாகராஜ், வழக்கறிஞர் ஆர்.காளமேகம் ஆகி யோர் புதனன்று (டிச 6), நேரில் சென்று அம்மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் பொன்னேரி கோட்டாட்சியர் ஐஸ்வர்யாவை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு, உடை, குடிநீர் போன்றவை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இணைய சேவை இல்லாததால் தகவல் தொடர்புகள் பெற முடிய வில்லை. உடனடியாக ஏற்பாடு செய்வதற்காக உறுதியளித்து அதி காரிகளை கிராமங்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  பிரபுசங்கர் ஆகி யோரிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அதிலிருந்து விரைந்து மீட்க நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்துள்ளனர்.

-பெ.ரூபன்