திருவள்ளூர், நவ 7- திருநின்றவூர் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீர் ராஜா மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. மழை நீரை வேகமாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சி யர், பொதுப்பணித்துறையினர், திருநின்ற வூர் நகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஜெ.ராபர்ட் எபிநேசர் அனுப்பினார். 1915ல் கட்டப்பட்ட ராஜா மதகு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து கிடந்தது. இதனை சீரமைத்து அதன் மூலம் ஏரியில் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் எனவும், ஏரியில் தண்ணீர் அளவு குறைந்த தும், ராட்சத மோட்டார்களை வைத்து குடியி ருப்புகளில் உள்ள மழை நீரை அகற்ற வேண்டும் எனவும் சிபிஎம் கோரிக்கை விடுத்தி ருந்தது. நடவடிக்கை எடுக்காவிடில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுபணித் துறையினர் ராஜா மதகு மற்றும் மூலக்கரை மதகுகளை சீரமைத்து அதன் வழியாக, கடந்த 2-நாட்களாக மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். பொதுப்பணித்துறை ஊழியர்களுடன் சேர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ் தேவேந்திரன், பெரியார் நகர் கட்சி கிளைச் செயலாளர் விஜி, சிஐடியு நிர்வாகி பச்சையம் மாள், வாலிபர் சங்க நிர்வாகி செந்தில் உட்பட பலர் மதகுகளை சீரமைக்கும் பணியில் ஈடு பட்டனர். 20 நாட்களுக்கு மேலாக வீடுகளில் தேங்கி யுள்ள மழை நீருடன், குப்பைகள், கழிவு நீர் ஆகியவை கலந்த பொது சுகாதாரம் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது.அங்கு நோய் தொற்று ஏற்படாதவாறு நகராட்சி நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிபிஎம் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.