விழுப்புரம், அக். 26- விழுப்புரம் மாவட் டத்தை சுற்றி பிள்ளை சாவடி, கோட்டக்குப்பம், நடு குப்பம், தந்திரியான் குப்பம், பொம்மையார் பாளையம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. கடல் சீற்றத்தின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த மீனவ கிராமங்களின் கடற்கரை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு அங்கு வசிக்கக்கூடிய மீன வர்களின் வீடுகள் மற்றும் படகு நிறுத்தும் இடங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்தது. இதையடுத்து அந்த பகுதியில் அரசு சார்பில் தூண்டில் வளைவு திட்டம் மூலம் கடற்கரை ஓரங்க ளில் கருங்கற்களை கொட்டி மண் அரிப்பை தடுத்த னர். இந்த திட்டம் பொம்மை யார்பாளையம் மீனவ கிராமம் வரைதான் செயல் படுத்தப்பட்டது. ஆனால் அதனை அடுத்துள்ள பிள்ளைசாவடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப் படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மீன வர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பிள்ளை சாவடி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும், 3 முறை சாலை மறியலில் ஈடுபட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கோபமடைந்த பிள்ளைசாவடி மீனவ மக்கள் 100க்கும் மேற்பட்டோர் பிள்ளை சாவடி பிரதான சாலையில் திடீரென்று மறியலில் ஈடு பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டகுப்பம் காவல் துறை யினர் மற்றும் வானூர் வட்டாட்சியர் கோவர்தனன் ஆகியோர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது உரிய அதி காரிகளிடம் பேசி உங்கள் கோரிக்கை நிறை வேற்றப்படும் என உத்தர வாதம் அளித்தனர். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.