districts

img

சென்னையில் முதல்முறையாக ரோபோ உதவியுடன் மூட்டு மறுசீரமைப்பு

சென்னை, ஏப்.10- சென்னையில் முதல் முறையாக ரோபோ உதவி யுடன் மூட்டு மறு சீர மைப்பு சிகிச்சை செய்யப் பட்டுள்ளது.  துல்லியமாக அறுவை\ சிகிச்சை மேற்கொள்ள நிபு ணர்களுக்கு இந்த ரோபோ உதவிசெய்யுமே தவிர அதுவே முழுமையாக அறுவை சிகிச்சை மேற் கொள்ளாது என்று  பிரசாந்த் மருத்துவமனைகளின் இயக்குனர் டாக்டர். பிர சாந்த் கிருஷ்ணா கூறி னார். சென்னையில் ரோபோ உள்ள மிக அரிதான மருத்துவமனைகளில் மாத வரத்தில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையும் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார். 3 டி தொழில்நுட்ப உதவி யுடன் துல்லியமான அறுவை சிகிச்சைக்கு ரோபோ பயன்படுவதால் ரத்த இழப்பு மிகவும் குறைவாகும்.மேலும் நோயாளிகள் விரைந்து குணமடைந்து வீடு திரும்ப முடியும் என்றும் அவர்தெரிவித்தார். இந்த ரோபோ உதவியுடன் 70வயது முதியவர் ஒரு வருக்கு மூட்டு மறுசீரமைப்பு சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. அதுகுறித்த விவ ரங்களையும் செய்தியாளர் கள் சந்திப்பில் அவர் விளக்கினார். குறிப்பாக  மூட்டுவலி மற்றும் முழங்கால் மூட்டு பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு மூட்டு மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்வதற்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுவதாக அவர் தெரிவித்தார்.  முன்னதாக இந்த நான்காவது தலைமுறை ரோபோவை பிரசாந்த் மருத்துவமனைகளின் தலைவர்  டாக்டர் சி. கீதா ஹரிப்ரியா , நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி.கோபாலசாமி ஆகி யோர் முன்னிலையில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் துவக்கி வைத்தார்.