ராணிப்பேட்டை, ஆக.5- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று (ஆக.5) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திர கலா தலைமையில் நடை பெற்றது. அப்போது, பொதுமக்களிடமிருந்து 354 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றார். பிறகு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து நெமிலி வட்டம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்த திரு நாவுக்கரசு மகன் கடந்த 2021 ஆம் ஆண்டு நீரில் மூழ்கி உயிரிழந்தக்காக முத லமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்திற்கான கா சோலையை, அரக்கோணம் வட்டம், சின்ன கைனூர் கிராமத்தில் வசிக்கும் வாசுகி மனவளர்ச்சி குன்றிய மகளின் சிகிச்சை செலவுக்காக ரூ. 25 ஆயிரத்திற்கான காசோலை யும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் உயர்கல்வி பயின்று வரும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு படிப்பதற்கு உதவும் வகை யில் ரூ. 25 ஆயிரம் மதிப்பி லான உருப்பெருக்கி கருவி யையும் வழங்கினார்.