சென்னை,நவ.21- இந்திய தொழில் கூட்ட மைப்பு (சிஐஐ ), தமிழ்நாடு அரசுடன் இணைந்து நடத்திய வருடாந்திர தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மாநாட்டினை சென்னையில் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாக ராஜன் செவ்வாயன்று (நவ.21) தொடங்கி வைத்தார். “நாளைக்கான தொழில் நுட்பம்” என்ற கருப்பொரு ளில் நடைபெறும் இந்த மாநாட்டில், பேசிய அவர், தமிழகம் முழுவதும் ஐடி துறையில் மட்டும் மாதத் திற்கு 10,000 கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம், வரும் ஆண்டு களில் அது வளர்ச்சி யடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு 10,000 வேலைகளுக்குப் பதிலாக, மாதத்திற்கு 25,000 வேலைகளை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். எனவே வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியின் அடிப் படையில், புதுமைக்கான ஒரு சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு விருதுகளை அமைச்சர் வழங்கினார். “பொதுத் துறையில் தொழில்நுட் பத்தின் முன்மாதிரியான பயன்பாடு” விருது தமிழ்நாடு அரசின் வேளாண் துறைக்கு வழங்கப்பட்டது. அதனை மாநில வேளாண் ஆணையர் டாக்டர் எல் சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். பெண் தொழில் முனைவோர் விருதை”, கிரியா டாக்ஸ் இணை நிறுவ னர் சௌமியா மகாதேவ னுக்கு வழங்கப்பட்டது.