districts

img

மாநகராட்சி விற்பனைக்குழு தேர்தல் 3 இடங்களை கைப்பற்றியது வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு

சென்னை, ஏப். 29 - பெருநகர சென்னை மாநகராட்சி நகர விற்ப னைக்குழு தேர்தலில், 3 இடங்களை, சென்னை மாநகர் சிறுகடை வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. தமிழ்நாடு சாலையோர வியாபாரிகளின் (வாழ் வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின்படி, மாநகராட்சி ஆணையர் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட நகர விற்பனைக் குழு (வெண்டிங் கமிட்டி) அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் உள்ளாட்சி அமைப்பின் மருத்துவ அதிகாரி, காவல் துறை அதிகாரி, போக்கு வரத்து காவல் அதிகாரி, உள்ளாட்சி அமைப்பு அதி காரி, வணிகர் சங்கங்களின்  பிரதிநிதி, அரசு சாரா அமைப்பு மற்றும் சமூகம்  சார்ந்த அமைப்பு பிரதிநிதி கள் 2 பேர் மற்றும் தெரு வோர வியாபாரிகளின் பிரதி நிதி 6 பேர் உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். இதில், தெருவோர வியா பாரிகளின் பிரதிநிதிகளாக 6 பேர் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட வேண் டும். எஞ்சிய 9 உறுப்பினர் கள் மாநகராட்சி ஆணையர் பரிந்துரை செய்வார். இதனையடுத்து சென்னை நகரம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 38 ஆயிரத்து 588 பேர் சிறு கடை வியாபாரிகள் உறுப் பினர்களாக சேர்க்கப்பட் டனர். இவர்களில் இருந்து  6 பேரை தேர்ந்தெடுப்ப தற்கான தேர்தல் ஏப்.27  அன்று மண்டல அலுவல கங்களில் நடைபெற்றது. இத்தேர்தலில் 13 ஆயிரத்து 506 பேர் வாக்களித்தனர். இந்த வாக்குகள் எண்ணும் பணி வெள்ளியன்று (ஏப்.28)  அண்ணா நகரில் நடை பெற்றது. இந்த வாக்கு எண்ணிக் கையில், சென்னை மாநகர்  சிறுகடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் போட்டியிட்ட வர்களில்,  ஜி.மோனிஷா (ஆதிதிராவிடர்), எஸ்.சித்ரா (மகளிர்), கே.பலராமன் (பொதுப்பிரிவு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.  மற்ற  அமைப்புகள் சார்பில்  கண்ணன் (பிற்படுத்தப் பட்டோர்), ஜெனிபர் (சிறு பான்மையினர்), பால முருகன் (மாற்றுத்திறனாளி) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.