districts

img

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை நோக்கி விவசாயிகள் பேரணி

புதுச்சேரி, நவ.26- துணை நிலை ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய தால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது. தில்லி விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி மோடி அரசு ஒப்புக்கொண்ட கோரிக்கை களை நிறைவேற்றாததை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பில் சனிக்கிழமை (நவ. 26) மாநில ஆளுநர்கள் மூலம் இந்திய குடியரசு தலைவருக்கு மனு அளிக்கும் வகையில் பேரணி நடை பெற்றது. அதன் ஒருபகுதியாக புதுச்சேரியிலும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடை பெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை அருகே தொடங்கிய பேரணிக்கு ஒருங்கி ணைப்பாளர் கீதநாதன் தலைமை தாங்கி னார். மாதா கோவிலை கடந்து ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாயிகள் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் சங்கர், கரும்பு விவசாயி கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் வடி வேல், விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ரவி, பத்மநாபன் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் செல்வகணபதி, செந்தில்குமார், புரு ஷோத்தமன், சாந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக போராட்டத்தை வாழ்த்தி தொழிற்சங்க தலைவர்கள் தா.முருகன், விஸ்வநாதன் ஆகியோர் பேசினர்.