காஞ்சிபுரம், ஜன.28 - தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஜன,26 அன்று விவசாயிகள் டிராக்டர் மற்றும் இருசக்கர மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர். காஞ்சிபுரம் காவலன் கேட் அருகே காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடத்தப்பட்ட பேரணிக்கு ஐக்கிய விவசாயிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆனந்த் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் கே.நேரு கலந்து கொண்டு டிராக்டரை இயக்கி பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவிச மாநில துணை செயலாளர் கே.நேரு, சிஐடியு மாநில செயலாளர் இ.முத்துக்குமார், சங்கத்தின் மாவட்ட செய லாளர் என்.சாரங்கன், மாவட்ட பொரு ளாளர் கே.செல்வம், கைத்தறி மாவட்ட செயலாளர் கே.ஜிவா, சிபிஐ விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஏ.மூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.