திருவள்ளூர், அக் 16- தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திங்களன்று (அக் 16), திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி அடுத்த சைனாவரம், பெரியபாளையம் அருகில் உள்ள மதுர வாசல் ஆகிய கிராமங்களில்கோயில் அடிமனையில் குடியிருக்கும் பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும், மீஞ்சூர் பேரூராட்சியில் கோயில் நிலத்தில் குடியிருக்கும் நபர்களின் தரை வாடகை உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.வி.நக்கீரன் தலைமை தாங்கினார்.இதில் மாவட்டச் செயலாளர் பி.அருள், பொருளாளர் எஸ்.இ.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் முவேல்ராஜா, தேவராஜ் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.