districts

img

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை, ஜுன் 10-

    திருவண்ணாமலை மாவட்டம் கலச பாக்கம் வட்டம் கேட்டவரம் பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 40 கிலோ கொண்ட ஒரு நெல் மூட்டைக்கு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை, விவ சாயிகளிடம் லஞ்சமாக பெறுவதை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    விவசாயிகளிடம் லஞ்சமாக பெற்ற பணத்தை முழுவதுமாக விவசாயிகளிடம் திருப்பி வழங்க வேண்டும்,  இனிவரும் காலங்களில் விவசாயிகளிடம் லஞ்ச மாகவோ, கூலியாகவோ பணம் பெறக் கூடாது, லஞ்சம் கேட்பவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

   சி.ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் எஸ்.பலராமன், விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.கே.வெங்கடேசன், பொருளாளர் அ.உதயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.திருமுருகன், பகுதிச் செயலாளர் எல்.சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.