திருவள்ளூர், மே 25-
கண்லூர் கிராமத்திற்கு குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வியாழனன்று (மே-25) மனு வழங்கினர்.
கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள பால வாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்லூர் பகுதி யில் 2 மற்றும் 3 வது வார்டு களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள மோட்டார் மற்றும் குடிநீர் குழாய்கள் முறையாக பரா மரிக்கப்படாததால், குடிநீர் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், விவ சாய கழனியில் பம்ப்செட்டு களை தேடி சென்று (ஆழ்துளை கிணறுகள்), தண்ணீர் சுமந்து வரும் நிலை நீடிக்கிறது.இதனை தவிர்க்க கண்லூர் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறுகளை அமைத்து குடிநீர் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் ஒன்றிய தலைவரும், கவுன்சிலரு மான எம்.ரவிக்குமார், ஒன்றிய துணைத் தலைவர் பி.ஆண்டவன் ஆகியோர் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவியி டம் மனு வழங்கினர்.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.