காஞ்சிபுரம், ஜூலை 10- பொதுமுடக்கம் முடிந்து பொதுப் போக்குவரத்து துவங்கி யுள்ள நிலையில் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை நேரடியாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் விவசாயி கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் சட்டசபைத் தேர்தல் மற்றும் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆறு மாதங்களாகக் குறைதீர் கூட்டம் நடை பெறாமல் இருப்பதால், இந்த மாதம் கூட்டத்தை நேரடியாக கூட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நேரு கூறுகையில்,“வைரஸ் தொற்று பெருமளவில் குறைந்துள்ள நிலையில் விவசாயிகளுக்காக பிரத்தியேகமாக நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் தங்களது பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க காத்தி ருக்கின்றனர். நெல் கொள்முதல், ஏரி ஆக்கிரமிப்பு, மின்சார பிரச்சனை, விவசாயிகளுக்கான மானியம் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக எடுத்துக் கூற வேண்டியுள்ளது” என்றார்.