districts

img

விவசாயிகளிடம் ரூ. 30 லட்சம் மோசடி, இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை, ஜன. 9 – ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், வேட்டாங்குளம் - மேட்டு வேட்டாங்குளம், அகவலம், ரெட்டி வலம் உள்ளிட்ட விவசாயிகளிடம் இடைத்தரகர் கள் நெல் மூட்டைகள் வாங்கிய வகையில் ரூ. 30 லட்சம்   மோசடி செய்துள்ளனர். இதனை கண்டித்தும் இடைத்தரகர்களி டம் இருந்து பொங்கலுக்கு முன்பு முழுமை யான பணத்தை பெற்றுத்தர கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ். கிட்டு தலை மையில் வியாழனன்று (ஜன. 9) நெமிலி பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில், நெமிலி, பனப்பாக்கம் பகுதியில் டெல்டா மாவட்டங்கள் போல நிரந்தர டிபிசிக்கள் திறக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் அமைக்க வேண்டும். தூசி நீக்கி காற்று, உலர் இயந்திரங்கள் அமைக்க வேண்டும். பணமோசடி, அடியாட்கள் அச்சுறுத்தல், மன உளைச்சல் தடுத்து நிறுத்தி, குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட நிர்வாகம், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இந்நிலையில்     விவசாய சங்கம் போராட்டம் அறிவித்திருந்த நிலை யில் செவ்வாயன்று (ஜன. 7) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசார ணையில் இடைத்தரகர்கள், வியாபாரிகள் விவசாயிகளை ஏமாற்றியது உண்மைதான் என காவல்துறை உறுதிப்படுத்தியது தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் அனைத்து பணத்தையும் திருப்பி கொடுப்பதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுந்தரத்திற்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம், கோகிலாவுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் புதனன்று (ஜன. 8) வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் திருமால்பூர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி சுந்தரம் விவசாய சங்கத்திற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர்கள் இரா. சரவணன், கே. நேரு, மாவட்ட செய லாளர் எல்.சி. மணி,  தவிச சங்க  மாவட்ட பொரு ளாளர் சி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். உடன் சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். வெங்கடேசன், காஞ்சிபுரம் விச மாவட்ட தலைவர் என். சாரங்கன், தீஒமு மாவட்ட தலைவர் எ.பி.எம். சீனிவாசன், கட்டுமானம் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் த. ஞானமுருகன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் கே.கே.வி. பாபு, வி.ச சோளிங்கர் வட்டார தலைவர் நிலவு குப்புசாமி, வாலிபர் சங்கம் பொறுப்பாளர் எஸ். தென்னரசு, சிவராம கிருஷ்ணன், கே. சிவகுமார், சி. தாமோதரன், வி. வரதன், டி. ரமேஷ், எம். ராஜா,  கொல்லா புரி உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். இறுதியாக அரக்கோணம் தாலுகா குழு உறுப்பினர் சிவகுமார் நன்றி கூறினார்.