வேலூர், ஆக.12 - குடியாத்தத்தில் 3 சமு தாயக் கூடங்களை திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் 2006-2011 சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேரணாம்பட்டு சாலை மாட்டுச் சந்தை அருகே பகத்சிங் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. மூங்கப்பட்டு ஊராட்சி காத்தாடி குப்பத்தில் சிபிஎம் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகள் தொழி லாளர்கள் நலனுக்காக கட்டப்பட்ட சமுதாயக்கூட மும் இதுவரை திறக்கப்படா மல் உள்ளது. அதேபோல் குடி யாத்தம் ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி யில் பாலிடெக்னிக் ரோட்டில் கட்டப்பட்டுள்ள சமு தாயக்கூடமும் இதுவரை திறக்கப்படவில்லை. மக்கள் வரிப்பணத்தில் பல லட்சங்கள் செலவு செய்து இவைகள் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து சிபிஎம் சார்பில் பலமுறை தலை யிட்டு இயக்கம் நடத்தியும் தற்போது வரை திறக்கப்படா மல் உள்ளது. ஏழை எளிய மக்கள் நலன் கருதி உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்காக இந்த சமுதாயக்கூடத்தை திறக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செய லாளர் கே.சாமிநாதன் மக்கள் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்தார். உடன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.கன்னி யப்பன், தலித் நா.சே.பாஸ்கர், மகாதேவன் இருந்தனர்.