districts

img

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறுவது தடுத்து நிறுத்தம்

திருவள்ளூர், ஏப் 29- திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையை  அடுத்த அய்யனேரியில் தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இதில் சுற்றுப்புறத்திலுள்ள அம்மனேரி, ஸ்ரீவிலாசபுரம், வேலன் கண்டிகை, கொண்டாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்  மூட்டைகளை இந்த கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.  தனியார் வியாபாரிகளி டம் சென்றால் அநியாயக்  கொள்ளை நடைபெறுகி றது. மேலும் முன் பணம் பெற்றுக் கொண்ட விவசாயிகளிடம் ஈட்டிக் காரன் போல எல்லா பணத் தையும் பிடித்துக் கொள் கின்றனர். இதிலிருந்து விடுபட அரசு நெல்  கொள்முதல் நிலையங் களை விவசாயிகள் நாடி செல்கின்றனர். வானம் பெய்தாலும், காய்ந்தாலும், பாதிப்பது விவசாயம் தான்.  சில சம யங்களில் கொள்ளை நோய் தாக்கினால் அவ்வ ளவு தான். வெறும் பதரும்,   வைக்கோலும் தான் மிஞ்சும்.  இப்படி தினம் செத்து பிழைக்கும் விவசாயின் வாழ்வில் ஏற்றம் பெற உற்பத்தி செலவை விட இரண்டு மடங்கு கூடுதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.  தமிழ்நாடு அரசு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இதில் அனைத்து வகையிலும் விவசாயிகள் தான் வஞ்சிக் கப்படுகின்றனர். இந்த சூழலில் தமிழ்நாடு அரசு  நெல் கொள்முதல் நிலை யங்களில் சிப்பத்திற்கு (மூட்டை ஒன்றுக்கு), ரூ.50  கமிசன் பெறுவதை அதிகாரி கள் வழக்கமாக கொண்டுள் ளனர். கமிசன் தரும் விவசாயிகளின் நெல் மூட்டைகளை மட்டும் உட னடியாக கொள்முதல் செய்யும் முறையற்ற நடை முறை இருந்து வருகிறது. இந்நிலை மாற பதிவு மூப்பு அடிப்படையில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும், கமிசன்  பெறுவதை தடுக்க வேண் டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி சனிக் கிழமையன்று (ஏப். 29)  அய்யனேரி நெல் கொள் முதல் நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த நிலையில் ஆர்.கே.பேட்டை வட்டாச்சியர் ரமேஷ், வேளாண் உதவி இயக்குநர் தாமோதரன் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது.  அப்போது, “இனி கமிசன் தொகை ரூ.50 பெறப்பட மாட்டாது. பதிவு மூப்பு அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ஜி.சம்பத், மாவட்ட பொருளாளர் சி.பெருமாள், வட்ட செயலாளர் வி.குப் பன், வட்ட தலைவர் எஸ். ஜெயச்சந்திரன், பி.கணே சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.