உத்தரபிரதேச லக்கிம்பூரில் 5 விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் சங்கம், காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்களன்று (பிப்.21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.டில்லி பாபு, மாவட்டச் செயலாளர் கே.நேரு, வி.கே.பெருமாள், சிபிஐ விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஏ.மூர்த்தி, ஜெ.கமலநாதன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல்.முருகேசன், கே.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.