districts

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த போலி மருத்துவர் கைது

கிருஷ்ணகிரி, மே 6- மருத்துவம் படிக்காமல் கிளினிக்கில் மருந்துகளை வைத்து பொதுமக்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர். ஆனந்தன் (42). தர்மபுரி மாவட்டம் பருவதனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (47). இவர்கள் கிளினிக்கில் கொரோனா மற்றும் பிற நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம்  படிக்காமல் கோட்டையூர் மலைக்கிராமத்தில் கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சி யருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆட்சி யர் உத்தரவின்பேரில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கோட்டையூர் மலைக்கிராமத்திற்கு சென்று, அவர்கள் நடத்தி  வரும் கிளினிக்கில் சோதனை நடத்தினர்.  அப்போது ஆனந்தனும், அங்கமுத்துவும் மருத்துவம் படிக்காமல் கிளினிக்கில் மருந்து களை வைத்து பொதுமக்களுக்கும், கொரோனா  நோயாளிகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.  இதையடுத்து காவல்துறையினர் போலி மருத்துவர் ஆனந்தனை கைது செய்தனர். மேலும்  தலைமறைவாகிவிட்ட மற்றொரு போலி மருத்து வர் அங்கமுத்துவை தேடி வருகின்றனர்.

;