கள்ளக்குறிச்சி, நவ.19 – விரைவு ரயில்கள் உளுந்தூர்பேட்டை யில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் கட்சி யின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர் சந்தித்து வலி யுறுத்தினார்‘. மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.கண்ணன் உடனிருந்தார். அந்த மனுவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய நக ராட்சி உளுந்தூர்பேட்டையாகும். கோவை- சேலம், சென்னை- மதுரை, திருச்சி-சென்னை, விழுப்புரம்-திருச்சி-புதுக் கோட்டை ஆகிய ரயில்வே சாலை மார்க்கங்களில் சந்திப்பு மையமாக அமைந்துள்ளது உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம். உளுந்தூர்பேட்டை நகராட்சியாக தரம் உயர்ந்த பின்னர் முக்கியமான வியாபார மையமாகவும் போக்குவரத்து மையமாகவும், சுற்றுவட்டார கிராமங்களின் வேளாண் விலை பொருட்களை சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாநகர சபைக்கு கொண்டு செல்லும் மையமாகவும் மாறியுள்ளது. இத்துடன் மும்பை, குஜராத், கேரளா, பெங்களூர் என வெளி மாநிலங்களுக்கும் சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களுக்கும் குடும்பம் குடும்பமாக சென்று வருகின்றனர். எனவே, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு வரும் பாசஞ்சர் ரயில் விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையம் வரை நீடிக்க வேண்டும், விழுப்புரத்தில் இருந்து புறப்படும் பேசஞ்சர் ரயிலை விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில் மாற்ற செய்ய வேண்டும். மேலும், உளுந்தூர்பேட்டை பகுதி வளர்ச்சி அடைந்து வருவதால் மக்களின் நலன் கருதி, உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் வழியாக செல்லும் நாகர்கோவில், வைகை, பல்லவன், குருவாயூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை இறக்கி விடவும் ஏற்றுச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.