வயநாடு பேரிடர்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 100 வீடுகள் கேரள முதலமைச்சரிடம் நிர்வாகிகள் உறுதி
சென்னை, ஆக. 10- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு வணிகர் பேர மைப்பின் சார்பில் 100 வீடுகள் கட்டித்தருவ தாக கேரள முதல்வரை சந்தித்து தெரி வித்தனர். இதுகுறித்து பேரமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வணிகர்களுக்காக மட்டுமன்றி, பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பல்வேறு வகைகளில் அவ்வப்போது நலத்திட்டங்கள் மூலம் உதவிக்கரம் நீட்டி வருகிறது. தற்போது கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட கொடூர மற்றும் கோரச் சம்பவ மான பெருமழை நிலச்சரிவால் ஒருசில ஊர்களே காணாமல் போயுள்ளன. அதில் மிகப்பெரிய சோகம் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடு உடமைகளை இழந்து நிராதரவாக நிற்கின்ற நிலை மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளின்தூ ண்டுதலாலும், உந்துதலாலும் வயநாடு பேரிடரில் வீடு இழந்த 100 பேருக்கு வீடுகள் கட்டித்தர பேரமைப்பு ஆயத்தமாய் இருக்கிறது என்பதை கேரள மாநில முதல்வர் பிணராய் விஜயன் அவர்களிடம் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், கோவை மண்டலத்தலைவர் சூலூர்.டி.ஆர்.சந்திரசேகரன், கன்னியாகுமரி மண்டலத் தலைவர் டி.பி.வைகுண்டராஜா, நீலகிரி மாவட்டத்தலைவர் கே.முகம்மதுபாரூக், மாநிலத் துணைத்தலைவர் ஏ.ஜெ.தோமஸ், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவர் ஏ அல்அமீன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பாபு, மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தெரிவித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் சார்பில் 100 வீடுகள் கட்டித்தரும் இந்த முயற்சிக்கு கேரள மாநில அரசு அனைத்து ஆதரவையும், ஒத்து ழைப்பையும் அளித்து உதவுவதாக கேரள முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக்கை தவிர்க்க மேயர் பிரியா வேண்டுகோள்
சென்னை, ஆக,11- பிளாஸ்டிக் பயன்படுத்து வதை தவிர்க்குமாறும், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் சென்னை மாந கராட்சி மேயர் பிரியா தெரி வித்துள்ளார். சென்னை திருவான்மி யூரில் எச்எல்ஆர் -எனும் தனியார் நிறுவனம் மூலம் கடற்கரைகள், சாலை கள், பூங்காக்கள் மற்றும் சென்னையின் பல பகுதிகளிலிருந்து இருந்து 1 கோடி பெட் பாட்டில்களை சேகரித்து அதை மறு சுழற்சி செய்து ஆடை நெய்வதற்கும் நூல்கள் தயாரிப்பதற்கும் அளித்து வருவதற்கான பாராட்டு விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா, பேசுகையில், “பிளாஸ்டிக் மறுசுழற்சி உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தாக உள்ளது, பிளாஸ்டிக் மனிதர்க ளுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கால்வாயில் போடுகிறோம். கடலில் போடுகிறோம். வகை,வகையான மீன்கள் அழிந்து வருகிறது. முடிந்த வரை பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை நிறுத்து மாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களும் ஒத்து ழைப்பு தந்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.
கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் மாணவர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்: சிபிஎம் கோரிகை
கடலூர், ஆக.11- கடலூர் அரசு பெரியார் கல்லூரி யில் காலியாக உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் அனுப்பியுள்ள மனு வருமாறு:- கடலூர் மாவட்டத் தலைநகரான கடலூரில் பெரியார் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதில் கடலூர், பண்ருட்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிகமாக விண்ணப்பங்கள் வருகின்றன. இவர்களில் 1,300 மாணவர்களுக்கு மட்டுமே கல்வி பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேர்க்கை கிடைக்காமல் தவிக்கும் நிலையும், உயர்கல்வி விட்டு வெளியேறும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது. இந்நிலையில் நடப்பு கல்வி யாண்டில் ( 2024 - 25 ) பி.சி பிரிவி னருக்கான இடங்களில் 300க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. கடந்த மாதம் முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்ட நடைபெற்று வரும் நிலையில், 300 இடங்களை காலியாக வைத்திருப்பது கற்றல் சூழலுக்கு உகந்ததல்ல. மேலும் காலதாமதமாக சேர்க்கை பெறும் மாணவர்களின் கல்வியும் இதனால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, முதலாம் ஆண்டில் நிரப்பப்படாமல் 300க்கும் மேற்பட்ட காலியிடங்கள் பிற சமூகப் பிரிவினரைப் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த கல்லூரி கடந்த 60 ஆண்டு களுக்கு முன் தொடங்கப்பட்ட அரசு கல்லூரி.கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் தொகை உயர்விற்கு இந்த ஒரு கல்லூரி போதுமானதாக இல்லை. எனவே, கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாணவிகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டும், பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரி இல்லாத நிலையில் கடலூர் நகரில் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் தொடங்க வேண்டும். இதற்குத் தேவையான இட வசதி கடலூர் மாநகரின் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.
சாதிச் சான்று வழங்க மறுக்கும் அதிகாரிகள் காத்திருப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அழைப்பு
கள்ளக்குறிச்சி, ஆ. 11 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எலவனாசூர் கோட்டை எ.புத்தூர், பரமேஸ்வரி மங்கலம், கூத்தனூர், வெள்ளையூர் ஆகிய கிராமங்களில் இந்து ஆதியன் பூம்பூம் மாட்டுக்காரர்கள் வசித்து வருகிறார்கள் இந்த சமூக மக்கள் தங்களது பிள்ளைகளுக்கு சாதி சான்று கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் குடும்பத்துடன் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆக.13 அன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். இதையடுத்து, ஆக. 9 அன்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அப்போது, சாதிச் சான்று வழங்க முன் மொழிவு செய்ய காலதாமதமாகும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆக. 13 அன்று காலை 11 மணிக்கு திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் வி. ரகுராமன் அறிவித்தார்.
சிறப்பு உட்கூறு நிதியை கண்காணிக்க குழு: தீ.ஒ.முன்னணி கோரிக்கை
புதுச்சேரி,ஆக.11- புதுச்சேரி மாநிலத்தில் 2021-22 பட்ஜெட்டில் ரூ. 396 கோடி, 2022-23 ஆம் ஆண்டு ரூ. 396, 2023-24 ஆம் ஆண்டில் ரூ. 441 கோடி, நடப்பாண்டில் ரூ. 488 கோடி என சிறப்பு உட்கூறு திட்ட நிதி (எஸ்சிபி) ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் 35 முதல் 40 விழுக்காடு வரை செலவு செய்ய அது ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. எனவே, இத் திட்டம் மற்றும் நிதி செலவினங்கள் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை புதுச்சேரி அரசு உருவாக்க வேண்டும். இந்த குழுவில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் அமைப்புகள் இடம் பெற வேண்டும். நிலம் இல்லாத பட்டியலின மக்களுக்கு நிலம் கையகப்படுத்தி இலவச மனைப் பட்டா வழங்கப்படும் என்று 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மேலும், பல அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக உள்ளது. செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் ஆர்.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியிருக்கிறார்.