சென்னை, டிச.14- காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்எல்ஏ மறை வுக்கு, மார்க் சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்ப தாவது: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலை வர்களில் ஒருவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், ஈரோடு கிழக்கு தொகுதி யின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பாரம்பரி யமான அரசியல் குடும்ப பின்புலத்தைக் கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்தவர். அரசியல் நிலைபாடுகளில் தனது கருத் துக்களை பளிச்சென்று பேசும் துணிச் சல்மிக்க அரசியல்வாதி. தோழமைக் கட்சி களுடன் நெருக்கமாகவும் மனம் விட்டும் பேசும் பண்பாளர். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நலம் தேறி மீண்டும் மக்கள் பணியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்தி ருந்த நிலையில் அவரது மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் மதச்சார் பற்ற முற்போக்கு இயக்கங்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், காங்கி ரஸ் கட்சியினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப் பிட்டுள்ளார்.