விழுப்புரம், ஜூன் 24-
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளதால் அதை வரவேற்று மாண வர்களை ஆங்கில வழியில் சேர்க்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தினர் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்தில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஹரி கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஏ.ஆர்.கே. தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெற்றோர் மற்றும் பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசார துண்டு பிரசுரங்களை வழங்கி, தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி கல்வி வகுப்பில் சேர்க்க வலியுறுத்தினர்.