districts

img

கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க ஊழியர்கள் கோரிக்கை

வேலூர். ஜூன் 10-

      கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உரு வாக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட 15ஆவது மாநாடு கவுரவத் தலைவர் ஏ.நாராயணன் தலைமையில் வேலூர் அண்ணா சாலையில் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெற்றது.

     மாநிலத் தலைவர் தி.தமிழரசு மாநாட்டை துவக்கி வைத்தார். தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் சி.ஞானசேகரன், சிஐ டியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசு ராமன், சம்மேளன நிர்வாகிகள் எம்.ராஜகேசி, வி.அரிகிருஷ்ணன், கே.கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

     செயலாளர் எம்.சசிகுமார் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் எம்.பாஸ்கரன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநில பொதுச் செயலாளர் இ.சர்வேசன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக வி.மஞ்சுளா வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் ஜி.பழனி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

    1,200 கிளைகளுடன் செயல்படும் மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்து லாபம் ஈட்டும் வகையில் பலப்படுத்த வேண்டும். மாவட்ட நகர கூட்டு றவு வங்கி ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வை கால தாமத மின்றி அமலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

    தலைவராக ஆர்.துரைராஜ், கவுரவ தலைவராக ஏ.நாராயணன், செயலாளராக எம்.சசிகுமார், பொருளாளராக ஆர்.தனசேகரன் உள்ளிட்ட 17 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.