திருவள்ளூர், டிச 3- தேர்தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்க ளின் கூட்டமைப்பின் சார்பில் செவ்வாயன்று (டிச.3), திருவள்ளூர் பேருந்துபணிமனை அருகில் தர்ணா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் 2021ஆம் ஆண்டில் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (டிச.3), தர்ணா நடை பெற்றது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் கோ.இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகி கள் மு.ஜம்பு, தலைவர்கள் ஆர்.ஜெய ராமன், பல.நா.மாசிலாமணி, எம்.எஸ்.வினாயகம், கன்னியப்பன், என்.சங்கர், வசந்தா ஆகியோர் பேசினர். அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க காஞ்சிபுரம் மண்டலத் தலைவர் மாய கண்ணன் நிறைவுயாற்றினார். போராட்டத்தில் அனைத்துத்துறை ஓய்வூதி யர் பள்ளி கல்வித் துறை ஓய்வூதியர் சங்கம் , போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதி யர் சங்கம், அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கம், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க ஊழியர்கள் என நூற்றுக்கணக்கான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். பொருளாளர் இரா.குப்பன் நன்றி கூறினார்.