விழுப்புரம், பிப். 5- கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப் ப்படும் என விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியர் சி.பழனி தெரிவித்தார். விழுப்புரம் ஆட்சியராக பணியாற்றி வந்த மோகன், செய்திமக்கள் தொடர்புத்துறை இயக்குந ராக இடமாற்றம் செய்யப் பட்டார். அவருக்கு பதி லாக விருதாச்சலம் உதவி ஆட்சியராக பணி யாற்றி வந்த சி.பழனி விழுப்புரத்தில் நியமிக்கப் பட்டார். இதையடுத்து அவர் ஞாயிறன்று (பிப். 5) விழுப்புரம் ஆட்சி யர் அலுவலகத்தில் பொறுப் பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகை யில், மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சுகாதாரம், கல்வி வளர்ச்சியில் முக்கி யத்துவம் அளிக்கப்படும். விளிம்புநிலை, கீழ்தட்டு மக்கள் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக முழுநேரமும் மக்களுக்காக செலவு செய்வேன். பொது மக்கள் எப்போது வேண்டு மானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். 94441 38000 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் குறைகள், புகார்களை தெரி விக்கலாம். கூட்டத்தில் அழைப்பை ஏற்கமுடியாத பட்சத்தில் வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலமும் தெரி விக்கலாம். வெளிப்படைத் தன்மையோடு மாவட்ட நிர்வாகம் செயல்படும் என்றார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் உதவி ஆட்சியர் ரவி தேஜா கட்டா, துணை ஆட்சியர் லாவண்யா, கோட்டாட்சியர் ரவிசந்திரன் ஆகியோர் இருந்தனர்.