திருவள்ளூர்,டிச 1- மாவட்ட ஆட்சியரின் உத்தரவு அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வெள்ளி யன்று (டிச 1), தண்டலத்தில் நடை பெற்ற விவசாயிகள் போராட்ட குழு கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தச்சூர் கூட்டு சாலை யில் இருந்து ஆந்திர மாநிலம் சிந்தூர் வரை 126 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 3,840 கோடி மதிப்பீட்டில் 6 வழிச்சாலை அமைக்க கடந்த 2021-ம் ஆண்டு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் 82 கிலோமீட்டர் தூரமும், தமிழ கத்தில் 44 கிலோ மீட்டர் தூர மும் இந்த ஆறுவழிச்சாலை அமைக்கப் படுகிறது. ஆந்திரா மாநிலம் சித்தூரில் தொடங்கி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கீளப்பூடி. மேலப்பூடி புண்ணியம், பெருமாநல்லூர், திரு மலைராஜூ பேட்டை, நெடியம் ஆகிய கிராமங்கள் வழியாக பொன்னேரி அருகில் உள்ள தச்சூர் கூட்டுச்சாலை வரை 6 வழிச்சாலை அமையவிருக்கிறது. இதற்கான பணிகள் இரவு பகலாக இப்பகுதிகளில் மும்முர மாக நடந்து வருகிறது. இந்த நிலை யில் பள்ளிப்பட்டு தாலுகா புண்ணி யம் கிராமத்தைச் சேர்ந்த விவ சாயிகள் தங்கள் நிலங்களுக்கு உரிய மதிப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 6 வழிச்சாலையின் குறுக்கே பள்ளங்கள் வெட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆறுவழிச்சாலை அமைய உள்ள பகுதியில் எடுக்கப் படும் விளை நிலங்களுக்கு 3.22 மடங்கு விலை வழங்கப்படும் என்று திருவள்ளூர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால் நிலங்களை கையகப் படுத்தும் தேசிய நெடுஞ்சாலை துறை யினர் 3.22 மடங்குக்கு மதிப்பீடு தொகை வழங்காமல் வெறும் மூன்று மடங்கு மட்டும் வழங்கு வதாக விவசாயிகள் புகார் தெரி வித்தனர். புண்ணியம் பகுதி விவ சாயிகள் குறைந்த இழப்பீட்டை ஏற்காமல் ஆறுவழிச்சாலையின் குறுக்கே கடந்த வாரம் பள்ளம் வெட்டி போராட்டம் நடத்தினர். அதன் பிறகு நடைபெற் பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் வெள்ளியன்று (நவ.1), பெரியபாளையம் அடுத்த தண்டலத்தில் 6 வழிச்சாலை யின் போராட்ட குழுவை சேர்ந்த விவசாயிகளின் கூட்டம் நடை பெற்றது. இதற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் ஊத்துக் கோட்டை வட்ட தலைவர் விஸ்வ நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், மாவட்ட நிர்வாகிகள் பி.ரவி, மாரி முத்து, வாசுதேவன், சசிகுமார், குணசேகரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். கோரிக்கை விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும், அதுவரை பாலம் கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். உரிய மதிப்பீடு பெறும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.