தொடக்கக் கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார கல்வி அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காட்டாங்குளத்தூர் வட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டார்.