districts

img

மின்வாரிய ஊழியர் போராட்டம்

மின்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில்  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மாநில துணைத் தலைவர்  பால்ராஜ் தலைமையில்  மறியல் போராட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன்  உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். பொன்னேரியில் நடைபெற்ற மறியலில்  சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.விஜயன், சென்னை வடக்கு  மண்டல தலைவர் கதிரேசன், செயலாளர் சந்திரசேகர் பொருளாளர் சத்தியமூர்த்தி கவுரத் தலைவர் மதன் கோபால் உட்பட்ட 150 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கைதாகினர்.