சென்னை, ஜூலை 11 ‘ஐசியூ படுக்கையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்களை நிரப்பாததால் பொதுமக்கள் சேவை பாதிப்பு ’’ என்ற தலைப்பில் திங்களன்று (ஜூலை 11) வெளியான செய்தியையடுத்து அம் மருத்துவமனை நிர்வாகம் குறைகளை போக்கியுள்ளது. வளாகங்கள் கூடுதல் முனைப்புடன் தூய்மை செய்யப்பட்டுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி தீக்கதிருக்கு நேரடியாக தொடர்பு கொண்டு மருத்துவமனையில் உள்ள சிறுசிறு குறைபாடுகள் களையப்பட்டுள்ளதாகவும் காலிப்பணியிடங்களை நிரப்ப மருத்துவ செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசு மருத்துவர், செவிலியர், ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணியை சிறப்பாக செய்து வருவதாகவும் கூறிய அவர் அரசு பொது மருத்துவமனையில் பராமரிப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார். மேலும் குறைகளை சுட்டிக்காண்பித்த தீக்கதிர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.