districts

img

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் பணி மாற்றி அமைப்பு

மாமல்லபுரம்,ஜூலை 24-

     சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  

   இந்த சாலை கூவத்தூர் அடுத்த முகையூர் அருகே உள்ள  ஓடையூர் ஏரியை ஒட்டி செல்கிறது. இதற்காக அடையாள கற்கள் நடப்பட்டன. நெடுஞ்சாலை பணியில் ஏரிப்பகுதியில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் நெடுஞ்சாலை பணியை  தொடர பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.

     மேலும் சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் சாலை  அமைப்பதற்கான மாற்று முறைகளை பரிசீலிக்க நெஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் விரிவான ஆய்வு நடத்தி ஓடையூர் ஏரிப்பகுதி பாதிக்காத வகையில் திட்டத்தில் மாற்றம் செய்துள்ளார். சென்னையில் இருந்து வரும்போது வலது புறத்தில் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ளும், இடதுபுறத்தில் மேலும் 3 மீட்டர்  முதல் 4 மீட்டர் வரை சாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

     மேலும் ஏரி பகுதியை தவிர்க்க புதிய தடுப்பு சுவர் கட்டவும்  முடிவு செய்துள்ளனர். ஆனால் ஏரியின் குறுக்கே புதிய நான்கு வழிப் பாதையில் மேம்பாலம் கட்டுவது தொடர்பான வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதுதொடர்பான விரிவான அறிக்கையை கடந்த ஜூலை 14 -ந்தேதி பசுமை தீர்ப்பாயத்தில் நெடுஞ்சாலைத் துறை  தெரிவித்துள்ளது. மேலும் புதிய திட்டத்திற்கான வரை படத்தை சமர்ப்பிக்குமாறு பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது. இந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு  வந்தது.