சென்னை,நவ.3- அண்மையில் அகால மரணமடைந்த தினபூமி ஆசிரியர் மணிமாறன், முன்னாள் செய்தி ஆசிரி யர் திருநாவுக்கரசு, ஈ நாடு பத்திரிகையாளர் நரசம்மா, தமிழன் டிவி திருச்சி மாவட்ட கேமி ராமேன் விக்னேஷ் ஆகி யோர் மறைவுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் (டியூஜெ) சார்பில் இரங்கல் கூட்டம் ஞாயிறன்று (நவ.3) சென்னையில் நடை பெற்றது. டியூஜெ சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.பி .தேவேந்திரன் தலை மையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன், மறைந்த ஊடக மற்றும் பத்திரி கையாளர்கள் பணிகளை நினைவு கூர்ந்தார். மறைந்த பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் உரிய உதவி களை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் சன் டிவி முன்னாள் செய்தி ஆசிரியர் மைக்கேல் ஜார்ஜ், மாநில பொதுச் செயலாளர் முத்து, அமைப்பு செயலாளர் பி. ஆர்.வேளாங்கன், தின பூமி வேலூர் பதிப்பு மேலாளர் சரவணன், மூத்த பத்திரிகையாளர்கள் திராவிட துரை, டி.ரமேஷ், ராஜேந்திரகுமார், உமர்ஷெரிப் சென்னை நிர்வாகிகள் அப்சர் பாஷா, ம.மீ.ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.