சென்னை, நவ.25- திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியரும், தமிழ்நாடு அரசின் “பத்திரபதிவுத்துறை”தலைவருமான சிவன் அருளை டி.யூ.ஜெ. தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் தலைமை யில் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். வேலூர் மாவட்டம் 3ஆக பிரிக்கப் பட்ட போது,புதிதாக உருவான மாவட்டம்தான் திருப்பத்தூர். இதன் மாவட்ட ஆட்சித் தலை வராக பொறுப்பேற்று, திறம் பட செயல்பட்டு, பொதுமக்கள் குறை களை உடனுக்குடன் தீர்த்துவைத்து, அனைத்து மக்களின் பேரன்பை யும், ஆதரவையும் பெற்றவர் சிவன் அருள். குறிப்பாக, பத்திரி கையாளர்களிடம் நட்பு பாராட்டிய வர். நள்ளிரவு எந்த நேரமானாலும், பத்திரிகையாளர்கள் அவரை அணுகி பிரச்சினைகளை கூறி தீர்வு காணலாம். தீக்கதிர் திருப்பத்தூர் செய்தி யாளர் முருகேசனின் இறப்பை தெரி வித்து அவரது குடும்பத்திற்கு உதவ கோரினோம். உதவுவதாக உறுதி யளித்து, திருப்பத்தூர் ஆட்சியரிடம் பேசி, அவர் ்மூலமாக உரிய உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். சென்னை சாந்தோமில் உள்ள, அவரது அலுவல கத்தில் சந்தித்துப் பேசியபோது சங்கத்தின் பொதுசெயலாளர் கே.முத்து, சென்னை மாவட்டத் தலைவர் ம.மீ. ஜாபர் ஆகியோர் உடனிருந்தனர்.