சென்னை, செப்.2- டீசல் விலை உயர்வு காரணமாக காசிமேட்டில் கடந்த சில மாதங்களாக 30 விழுக்காடு விசைப்படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 15 முதல் 20 நாட்கள் வரை தங்கி மீன் பிடிப்பது வழக்கம். இதற்கு 6500 முதல் 8000 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. மீன்களை பதப்படுத்து வதற்கு ஐஸ் கட்டிகள், மீனவர்கள் தங்கி மீன் பிடிப்பதற்கு தேவையான ரேசன் பொருட்கள் உள் ளிட்டவற்றை கணக்கிட்டால் ஒரு விசைப்படகு ஒரு முறை சென்று வர ரூ. 4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை தேவைப்படுகிறது. தற்போது டீசல் விலை உயர்வு மற்றும் பல நேரங்க ளில் குறைந்த அளவு மீன்களே கிடைப்பதால் விசைப்படகு மீனவர்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இதனால் விசைப்படகு மீனவர்கள் நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு தவித்து வருகிறார்கள். எனவே மானிய டீசலை கூடுதலாக வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தற்போது குறைந்த அளவு விசைப்படகுகள் கடலுக்குள் செல்வதால் காசிமேடு மீன்பிடி துறை முகத்திற்கு மீன் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதன் காரண மாக மீன்களின் விலையும் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக காணப்படுகிறது.