திருவள்ளுர்,மே 14-
பொன்னேரி அடுத்த வெள்ளகுளம் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ என்ற கூலித்தொழிலாளி வீட்டில் சனிக்கிழமையன்று மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்ததும் பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் பீரோவில் இருந்த ரூ.43 ஆயிரம் ரொக்கமும் எரிந்து சாம்பலானது. உயர் மின் அழுத்தம் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.