districts

குடிநீர் பாட்டில் ஆவின் அறிமுகப்படுத்துகிறது

சென்னை,மே 15-  

    ஆவினில் மலிவு விலை குடிநீர் பாட்டில்கள் இரு மாதங்களுக்குள் விற்பனைக்கு வரும் என தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் தெரிவித்துள்ளது.

    இது தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இரண்டாவது குடிநீர் விற்பனைத் திட்டமாகும். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பால் பாக்கெட்டுகள் விலையை உயர்த்தாமல் ஆவினில் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் 500 மி.லி. மற்றும் 1000 மி.லி. குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஆவினில் அனைத்துக் கடைகள், பேருந்து நிலையங்களில் இந்த குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்தனர்.