வேகவதி ஆற்றில் தூர்வாரும் பணி
காஞ்சிபுரம்,செப்.25- காஞ்சிபுரம்வேகவதி ஆற்றின் பெரும் பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளதால் ஆண்டுதோ றும் இந்த ஆற்றில் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் நகரில் வேகவதி ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. இதனால் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் வேகவதி ஆற்று பகுதிகளில் வசிக் கும் பொதுமக்கள் கடுமை யாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சனை தொடர் கதையாக உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வேகவதி ஆற்றில் வெள்ளம் செல்வதற்கு வசதி யாக மழைக் காலங்களில் தூர்வாரும் பணி தொடங் கும். இந்நிலையில் தமிழ கத்தில் வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளது. இதனால் காஞ்சி புரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க தூர்வாரும் பணிகள் நடை பெற்று வருகிறது.
வாகன தகுதிச் சான்றுக்கு தானியங்கி சோதனை நிலையம்
சென்னை,செப்.25- போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்று 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தானியங்கி சோதனை நிலையம் மூலமாக மட்டுமே வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் செங்குன்றம், தாம்பரம், திருபெரும்புதூர், வேலூர், திண்டிவனம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 18 வட்டார போக்குவரத்து அலுவல கங்களில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரு சக்கர வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெற ரூ.650 கார்களுக்கு ரூ.850 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்
செங்கல்பட்டு,செப்.25- சென்னை, செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைவலி, காய்ச்சல், சளி, இருமல், உடல் வலியுடன் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.சுகாதார அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாணவியை மிரட்டி நகை பறிப்பு
சென்னை,செப்.25- புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு மாதவரம் தட்டாங்குளம் சாலை பகுதியைச் சேர்ந்த சந்தீப் சோலங்கி (23) என்பவர் கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஆனார். இதனால் இருவரும் நண்பர்களாக பழகினர். இந்த நிலையில் மாணவியிடம் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பரப்புவதாக சோலாங்கி மிரட்டல் விடுத்து 10 சவரன் நகை வாங்கியதாக தெரிகிறது. மேலும் அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகி றது. இதுகுறித்து மாணவியின் தந்தை புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிற்சாலையில் தீ விபத்து
செங்கல்பட்டு,செப்.25- செங்கல்பட்டை அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் ஐ போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. ஐ போன் 14 மற்றும் 15 செல் போனுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை யில் ஞாயிறன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்பு கையால் அப்பகுதி முழு வதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்த னர்.
விழுப்புரம் நீதிமன்றத்தில் டி.ஜெயக்குமார் ஆஜர்
விழுப்புரம்,செப்.25- விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இங்கு அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அப்போது கனிம வளத்துறை அமைச்சராக இருந்த க. பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012 இல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.bஜயக்குமார், வழக்கறிஞர் சீனிவாசன் மூலம் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையின் போது ஜெயக்குமார் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். அந்த மனு மீதான விசாரணை திங்களன்று (செப்.25) நடைபெற்றது, அப்போது விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜரானார்.
பூண்டியில் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறப்பு
திருவள்ளூர், செப்.25- சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று சத்தியமூர்த்தி சாகர் பூண்டி நீர்த்தேக்கம், 34,58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் 34 அடியை தொட்டுவிடும் எதிர்பார்க்கப்படுகிறது. உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து திங்களன்று விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலையாற்றின் கரையின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.