சென்னை, ஜூலை 17 - ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று வீட்டுவேலை தொழி லாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பெருநகர வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஜூலை 18) கிண்டியில் நடைபெற்றது. இந்தப் பேரவையில், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும். 55வயது நிறைந்த தொழி லாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், வார விடுமுறை, ஆண்டுக்கொருமுறை போனஸ் வழங்க வேண்டும். வீட்டுவேலை தொழிலாளர்களை தொழிற் தகராறு சட்டத்திலும், இஎஸ்ஐ, பிஎப் திட்டத்திலும் இணைக்க வேண்டும், நலவாரிய பயன்களை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் டி.ஏ.லதா தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ஆர்.துளசி செங்கொடியை ஏற்றினார். துணைத்தலைவர் ஜி.ஜெய ராமன் வரவேற்க, துணைத் தலைவர் வி.தாமஸ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாநிலச் செய லாளர் எம்.தனலட்சுமி பேரவையை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.விஜயா வேலை அறிக்கையும், பொருளாளர் ஆர்.பார்வதி வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். தென்சென்னை மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.சாந்தி வாழ்த்துரை வழங்கினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் யு. அணில் குமார் நிறைவுரையாற்றினார். துணைச் செயலாளர் கே.குணசேகரன் நன்றி கூறினார். மாவட்டக்குழுவின் தலைவராக டி.ஏ.லதா, பொதுச் செயலாளராக எஸ்.விஜயா, பொருளாளராக ஆர்.பார்வதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.