districts

img

வேலூர் அருகே பள்ளி கொண்டாவில் திமுக பவள விழா - முப்பெரும் விழா

வேலூர், செப். 12- திமுக பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் வருகிற 17 ஆம் தேதி நடை பெற உள்ளது. இதில், தமிழ்நாடு முதலமைச்ச ரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதை யொட்டி, பள்ளி கொண்டா கந்தனேரி பகுதியில் பிரமாண்ட மான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வரு கிறது. இப்பணிகளை கட்சியின் பொதுச்செய லாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார்.  அப்போது, 6 வழிச் சாலையில் இருந்து விழா மேடைக்கு முதலமைச்சர் செல்லும் பாதை குறித்து ஆலோசிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சருக்கு, மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு எம்.எல்.ஏ வுமான நந்தகுமார் விரிவாக எடுத்துரைத்தார்.  இதைத்தொடர்ந்து அமைச்சர் துரை முருகன் பேசுகையில், திமுக-வின் பவள விழா வேலூரில் நடப்பதும் சிறப்பு. இதில், கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை பரந்து கிடக்கும் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்” என்றார்.  இந்த ஆய்வின்போது, எம்.பி. க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ கார்த்திகேயன், அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், பள்ளிகொண்டா நகர பஞ்சாயத்து தலைவர் சுபபிரியா, ஒன்றிய திமுக செயலாளர்கள் வெங்கடேசன், சீதா ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.  விழா நடக்கும் மைதானத்தில் பாது காப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் மணி வண்ணன் ஆய்வு செய்தார். அப்போது, 6 வழிச் சாலையின் இருபுறங்களிலும், விழாவிற்கு வருகை தரும் கட்சியினரின் வாக னங்களுக்கு ஏற்படுத்தப்படும் நிறுத்தம் வசதி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.  இதேபோன்று, மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்ட வீடுகளையும், முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் காவலர்கள் இருந்தனர்.