districts

img

திமுக கூட்டணி மாமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்

சென்னை, பிப். 23 - பெருநகர சென்னை மாநகராட்சி யில் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாமன்ற புதனன்று  (பிப்.23) முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னை மாநகராட்சியில் 200  வார்டுகள் உள்ளன. இந்த வார்டுக ளுக்கான தேர்தல் கடந்த 19ந் தேதி  நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.22 அன்று எண்ணப் பட்டன. இதில், 178 இடங்களை மதச்சார்பற்ற  முற்போக்கு கூட்டணி கைப்பற்றியது. அதன்படி, திராவிட முன்னேற்றக் கழகம் 153, காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி 4, மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழகம் 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1, இந்திய யூனியன்  முஸ்லீம் லீக் 1 இடங்களை கைப்பற்றின.  அதிமுக 15,  அமமுக 1, பாஜக 1, சுயேட் சைகள் 5 இடங்களை கைப்பற்றின. இதனைத் தொடர்ந்து மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி மாமன்ற  உறுப்பினர்கள் திமுக தலைமைய கமான கலைஞர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர்கள் ஆர்.ஜெயராமன், பா.விமலா, ஆர்.பிரியதர்ஷிணி, எம்.சரஸ்வதி ஆகியோர் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி., தமிழச்சி  தங்கபாண்டியன் எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, பி.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.