விழுப்புரம்,மே 7- விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பேரூராட்சியில் திறந்தவெளி குடிநீா் கிணற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செஞ்சி வட்டம்,அனந்தபுரம் பேரூராட்சி பகுதியில் மாநில பேரிடா் கால நிவாரண நிதியில் கடந்த 2019-2020-ஆம் ஆண்டில் கீழ்மலை ஏரி அருகில் திறந்த வெளி கிணறு மற்றும் குழாய் இணைப்பு அமைக்கும் திட்டப்பணி ரூ.30 லட்சம் செலவில் நடைபெற்றது. இந்தப் பணி முடிவடைந்து சுமார் 3 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இதுவரை கொண்டு வரப்படவில்லை, குடிநீரேற்ற மின் இணைப்பு பெற மோட்டார் பம்புசெட் அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழாய் இணைப்பும், மின் இணைப்பும் அமைக்கப்படவில்லை.இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தக் கிணற்று நீரை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அனந்தபுரம் பேரூ ராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக உள்ளாட்சி நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் இதுவரை எவ்வித பயனும் இல்லை. தற்போது கோடைக் காலம் என்பதால் குடி நீா் பற்றாக்குறையைப் போக்க போர்க்கால அடிப்படையில் இந்தக் கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.