முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் இடமிருந்து ராணிப்பேட்டை மாவட்டஆட்சியர் ச.வளர்மதி, 30 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து 25 முன்னாள் படைவீரர்களுக்கு ரூ 3.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் உதவி இயக்குநர் படைவீரர் நலன், லெப்ட்னன் கமாண்டர் ஞானசேகரன்,கேப்டன் சாமுவேல், அலுவலக கண்காணிப்பாளர் லதா ஆகியோர் உள்ளனர்.