districts

விநாயகர் சிலைகள் கரைப்பு: கடற்கரையில் பலத்த பாதுகாப்பு

சென்னை,ஆக.1- சென்னையில் புதனன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதை யொட்டி வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு செய்தனர். இந்த சிலைகளை கடலில் கரைப்பதற் காக சென்னை மெரினா கடற்கரை, பட்டினப் பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறை முகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை  மேடை பின்புறம், எண்ணூர் ராமகிருஷ்ணா  நகர் இடங்களில் பொதுமக்கள் எடுத்து  வந்து கடலில் கரைத்தனர். வெள்ளி, சனி,  ஞாயிற்றுக்கிழமைகளில் கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க அதிக  அளவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணலி, வில்லிவாக்கம், செங்குன்றம், திருவேற்காடு, கோயம்பேடு, போரூர், வியாசர்பாடி, பெரம்பூர், கொடுங்கையூர், மாதவரம், கொளத்தூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், கே.கே.நகர்,  மேடவாக்கம், பல்லாவரம், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும்  விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட வுள்ளன. இதனால் விநாயகர்சிலைகள் கரைக்கும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 காவல்துறை அறிவுரை  
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்கவும் காவல் துறை வலியுறுத்தியுள்ளது. விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள், சிலை கரைக்கும்  இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. சென்னை பெருநகரில் 15,000 காவல்  அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு  சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.