districts

img

தென்பெண்ணை கரையோரம்  பழம் பொருட்கள் கண்டுபிடிப்பு

விழுப்புரம்,செப்.20- விழுப்புரம் அருகே சங்ககால மக்கள் பயன்படுத்திய 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற் றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்புற களஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால மக்கள் பயன்படுத்திய பொருட்களை கண்டறிந்தார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், “தென்பெண்ணையாற்று கரையில் சங்ககால மக்கள் பயன்படுத்திய அகல்விளக்கு, சுடுமண் தாங்கி, கெண்டிமூக்கு பானை, குறியீடு உள்ள பானை ஓடு, சிவப்பு நிற வழவழப்பான உடைந்த பானைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கண்டெடுத்தோம்” என்றார். இந்த தொல்லியல் தடயங்கள் மதுரை கீழடி பகுதிகளில் கிடைத்தது போலவே,பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்து வருவதால் தென்பெண்ணை ஆற்றங்கரை சங்ககால மக்களின் வாழ்விடமாகவும் இருந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.