விழுப்புரம்,மார்ச் 4- மயிலம் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியின் காப்பா ளர் மீது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். மயிலத்திலுள்ள ஆதிதிரா விடர் நல மாணவியர் விடுதியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில்,“ விடுதிகளில் தங்கி அரசுப் பள்ளிகளில் பயிக்கும் மாணவர்கள் ஆரோக்கியத்துடன் கூடிய உணவு, அடிப்படை பொருட்கள், ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கி, கற்றல் திறனை மேம் படுத்த முதலமைச்சர் வழி வத்துள்ளார். அதனடிப்படையில், மயிலம் ஆதிதிராடர் நல மாணவியர் விடுதியில் குடிநீர், கழிப்பறை , படுக்கையறை , மின் வசதி, மாணவியர்களுக்கு வழங்கப்படும். உணவுப் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்”என்றார். இந்த ஆய்வின்போது, விடுதி காப்பாளர் தினமும் விடுதியில் தங்காமல் சென்று விடுவதும், தரமற்ற உணவும் முழுமையான அளவும் வழங்காததும் கண்டுப் பிடித்தோம். இதனையடுத்து, விடுதி காப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.