சென்னை, மார்ச் 14- மாற்றுத்திறனாளியை தரக்குறைவாக பேசிய அதிகாரிகளைக் கண்டித்து சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தேனாம் பேட்டையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மாவட்ட அலுவ லகத்தில் மாற்றுத்திறனாளி அரி கணேஷ் என்பவரை தரக்குறைவாக பேசிய அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் செவ்வாயன்று (மார்ச் 14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர். ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி, மாநிலக் குழு உறுப்பினர் மாரியப்பன், நிர்வாகிகள் நடராஜன், சுரேந்தர், மனோன்மணி, செல்வ குமாரி, சாரதி, ரவி, பிரேமா, மகேந்திரன் ஆகியோர் பேசினர். தவறிழைத்த வர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி சங்க நிர்வாகிகள் உயர் அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர். இதனை யொட்டி சம்பந்தப்பட்ட அதிகாரி, மாற்றுத்திறனாளி யிடம் மன்னிப்பு கோரினார். பாதிக்கப்பட்டவருக்கு இம்மாதம் முதல் உதவித் தொகையும், மூன்று சக்கர வாகனமும் வழங்க அதிகாரி கள் ஒப்புக்கொண்டனர்.